TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 2
21. பொருந்தாத இணை எது?
(A) ஏறுகோள் - எருதுகட்டி
(B) ஆதிச்சநல்லூர் - அரிக்கமேடு
(C) திருவாரூர் - கரிக்கையூர்
(D) பட்டிமன்றம் - பட்டிமண்டபம்
(C) திருவாரூர் - கரிக்கையூர்
22. பால் ………….
சரியான மரபுச் சொல்லை எழுதுக.
(A) பால் குடி (C) பால் பருகு
(B) பால் உண் (D) பால் தின்னவும்
(C) பால் பருகு
23. எதிர்ச்சொல் தருக.
தொன்மை
(A) புதுமை (C) பெருமை
(B) பழமை (D) சீர்மை
(A) புதுமை
24. பொருந்தாத இணையைக் கண்டறிக
(A) கடும்பு சுற்றம் (C) அல்கி - தங்கி
(B) ஆரி-அருமை (D) இறடி- சோறு
(D) இறடி- சோறு
25. 'ஐயம்' என்பதன் எதிர்ச்சொல் எழுதுக.
(A) தெளிவு (C) அச்சம்
(B) சந்தேகம் (D) பயம்
(A) தெளிவு
26. 'செத்திறந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது
(A) செ + திறந்த (C) செத்து + திறந்த
(C) செத்து + இறந்த (D) சே + இறந்த
(C) செத்து + திறந்த
27. சேர்த்தெழுதல்
காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
(A) காட்டாறு (C) காட்டு ஆறு
(B) காடாறு (D) காடு ஆறு
(A) காட்டாறு
28. சரியான நிறுத்தற் குறிகள் அமைந்த தொடரைத் தேர்க
(A) குழந்தை நிலவைப்பார்த்து, நிலா நிலா ஓடிவா! என்று
பாடியது
(B) குழந்தை நிலவைப்பார்த்து, 'நிலா
நிலா ஓடி வா!' என்று பாடியது
(C) குழந்தை, நிலவைப்பார்த்து
நிலா நிலா ஓடிவா! என்று பாடியது.
(D) குழந்தை நிலவைப்பார்த்து, "நிலா நிலா ஓடி
வா" என்று பாடியது.
(C) குழந்தை, நிலவைப்பார்த்து நிலா நிலா ஓடிவா! என்று பாடியது.
29. பொருத்தமான நிறுத்தற் குறிகள் அமைந்த தொடரைத் தேர்க
(A) ஏவல் வேண்டுதல் வாழ்த்துதல் வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர்
விழைவுத் தொடர் ஆகும்
(B) ஏவல், வேண்டுதல் வாழ்த்துதல் வைதல் ஆகிய பொருள்களில்
வரும் தொடர்
விழைவுத் தொடர் ஆகும்.
(C) ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல்,
வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.
(D) ஏவல் வேண்டுதல் வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில்
வரும் தொடர்
விழைவுத் தொடர் ஆகும்.
(C) ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.
30. சரியான நிறுத்தற்குறிகள் அமைந்த தொடரைத் தேர்க.
(A) சிகாமணிதான், எடுத்திருப்பான் என்பது பெரும்பாலோரின்
கருத்து
(B) "சிகாமணிதான் எடுத்திருப்பான்!" என்பது பெரும்பாலோரின் கருத்து.
(C) சிகாமணிதான் எடுத்திருப்பான் என்பது
பெரும்பாலோரின் கருத்து.
(D) சிகாமணிதான்! எடுத்திருப்பான் என்பது
பெரும்பாலோரின் கருத்து.
(B) "சிகாமணிதான் எடுத்திருப்பான்!" என்பது பெரும்பாலோரின் கருத்து.
31. ஊர்ப்பெயரின் மரூஉவை கண்டறிக
உதகமண்டலம்
(A) உதகைமண்டலம் (C) உதகமண்டல்
(C) உதகை (D) ஊட்டியூர்
(C) உதகை
32. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
நாகப்பட்டினம்
(A) நாகைப்பட்டி (C) நாகையூர்
(B) நாகை (D) நாகைநகர்
(B) நாகை
33. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
கீழ்க்கண்டவற்றுள் புதுச்சேரியின் மரூஉவைத் தேர்ந்தெடுக்க.
(A) புதுகை (C) புதுமை
(B) புதுவை (D) புதுச்சை
(B) புதுவை
34. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்
சந்தோஷம்
(A) துன்பம் (C) மகிழ்ச்சி
(B) வருத்தம் (D) அமைதி
(C) மகிழ்ச்சி
35. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிக
எக்ஸ்பெரிமெண்ட்
(A) சோதனை (C) ஆய்தல்
(B) பரிசோதனை (D) ஆய்வகம்
(A) சோதனை
36. பிறமொழிச் சொற்களுக்கான தமிழ் சொல்லினை எழுதுக.
தொங்கான்
(A) பேருந்து (C) ஏவுகணை
(B) விமானம் (D) கப்பல்
(D) கப்பல்
37. 'எழுது' எனும் வேர்ச்சொல்லின் வினைமுற்று சொல்லைக்
கண்டறிக.
(A) எழுதுக (C) எழுதினாள்
(B) எழுதுதல் (D) எழுதிய
(C) எழுதினாள்
38.
"உனக்கு பாடத் தெரியுமா?" என்ற
வினாவிற்கு 'ஆடத்தெரியும்' என பதில்
கூறுவது,
எவ்வகை விடை?
(A) வினா எதிர் வினாதல் விடை (C)
உறுவது கூறல் விடை
(B) உற்றது உரைத்தல் விடை (D)
இனமொழி விடை
(D) இனமொழி விடை
39. விடை வகையை கண்டறிக.
'நீ விளையாட வில்லையா?' என்ற வினாவிற்குக் 'கால் வலிக்கும்' என்று கூறுவது
(A) சுட்டு விடை (C)
உறுவது கூறல் விடை
(B) உற்றது உரைத்தல் விடை (D) ஏவல் விடை
(C) உறுவது கூறல் விடை
40. அலுவல் சார்ந்த சொற்கள் (கலைச்சொல்)
Degree
(A) பட்டயம் (C) செப்பேடு
(B) சட்ட ஆணை (D) பட்டம்
(D) பட்டம்