அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள்
வரலாறு - பல்லவர்கள்
கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
I. மகேந்திரவர்மன் - குடவரை கோவில்
II. நரசிம்மவர்மன் - ஒற்றைக்கல் ரதம்
III. ராஜசிம்மன் - மகாபலிபுரம் கடற்கரை கோவில்
(A) I மற்றும் II
(B) II மற்றும் III
(C) I மற்றும் III
(D) I, II மற்றும் III
ANSWER D
புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது ………. கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
(A) குடுமியான் மலை
(B) மாமண்டூர்
(C) உத்திரமேரூர்
(D) மகேந்திரவாடி
ANSWER A
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க (கல்யாணி சாளுக்கியர்கள்) :
I. காசிவிஷ்வேஷ்வரா கோயில் - லக்குன்டி
II. மகாதேவர் கோயில் - நொளம்பவாடி
III. சரஸ்வதி கோயில் - கடக்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது (அ) எவை சரி?
(A) I மட்டும்
(B) II மட்டும்
(C) I மற்றும் III மட்டும்
(D) II மற்றும் III மட்டும்
ANSWER C
குடைவரை கோயில்கள் என்ற புதிய கட்டிடக்கலை-பாணியை அறிமுகப்படுத்தியவர் யார்?
(A) முதலாம் நந்திவர்மன்
(B) இரண்டாம் நந்திவர்மன்
(C) முதலாம் மகேந்திரவர்மன்
(D) முதலாம் நரசிம்மவர்மன்
ANSWER C
தனித்து நிற்கும் ஒன்றை அடையாளம் காண்
(A) லலிதாங்குர பல்லவேஸ்வரர் - திருச்சிராப்பள்ளி
(B) நரவராஹ அவதாரம் - உதயகிரி
(C) கோவர்த்தன கிரிநாதர் - மாமல்லபுரம்
(D) வடபத்ரசாயி கோபுரம் - ஸ்ரீவல்லிபுத்தூர்
ANSWER D
காஞ்சியில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோயிலை கட்டியவர் யார்?
(A) ராஜ சிம்மன்
(B) முதலாம் மகேந்திரவர்மன்
(c) முதலாம் நரசிம்மவர்மன்
(D) அபராஜித்தன்
ANSWER A
பல்லவ கோயில்களின் காலம்
(A) AD 600-850
(B) AD 1150 - 1350
(C) AD 900 - 1150
(D) AD 1336-1565
ANSWER A
பல்லவர் காலக் கட்டிடக் கலையின் இறுதி நிலைக்கு எடுத்துக் காட்டு
(A) மண்டகப்பட்டு
(B) வைகுந்த பெருமாள் கோயில்
(C) வராஹ மண்டபம்
(D) காஞ்சி கைலாச நாத கோயில்
ANSWER B
பல்லவர்களின் தலைநகரமாக இருந்தது
(A) காவேரிப்பட்டினம்
(B) காஞ்சிபுரம்
(C) காவேரிப்பாக்கம்
(D) விழுப்புரம்
ANSWER B
எந்த பல்லவ மன்னர் திருமங்கை ஆழ்வாரை ஆதரித்து அவரை பின்பற்றியவர்?
(A) சிம்ம விஷ்ணு
(B) நரசிம்மன்
(C) பரமேஸ்வரன்
(D) இரண்டாம் நந்திவர்மன்
ANSWER D
"அதியந்த கர்ம பல்லவேஸ்வரக்ரம்" என எந்தக் கோவில் அழைக்கப்படுகிறது?
(A) மாமல்லபுரம் கடற்கரைக் கோவில்
(B) காஞ்சி கைலாச நாதர் கோவில்
(C) காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவில்
(D) மாமல்லபுரம் ஈஸ்வரன் கோவில்
ANSWER B
பொருத்துக
(a) கைலாசநாதர் கோவில் 1. மாமல்லபுரம்
(b) மண்டகப்பட்டு 2 இசைக்கல்வெட்டு
(c) கடற்கரைக் கோவில் 3. முதலாம் ராஜசிம்மன
(d) குடுமியான் மலை 4. முதலாம் மஹேந்திரவர்மன்
(a) (b) (c) (d)
(A) 3 2 1 4
(B) 4 2 1 3
(C) 3 4 1 2
(D) 4 1 2 3
ANSWER C
ஒரு பெண் தன் மடியில் குழந்தையைக் கட்டிக் கொண்டு ஈட்டி எறிகிற ஓவியம் ஒன்று இங்குக்
காணப்படுகிறது
(A) எலிபண்டா
(B) அஜந்தா
(C) பிம்பேட்கா
(D) எல்லோரா
ANSWER C
அஜந்தா ஓலியங்கள் இவர்களது காலத்தைச் சார்ந்தவை
(A) சாளுக்கியர்கள்
(B) ராஷ்டிரகூடர்கள்
(C) சாதவாகனர்கள்
(D) பல்லவர்கள்
ANSWER C